பெரம்பலூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, இளம்பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் - பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பு
Apr 26 2019 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, கல்லூரி மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஆளுங்கட்சி பிரமுகர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வன்கொடுமை ஆளாக்கி, அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ பதிவில் தெரியவந்துள்ளது.