மதுரையில் சித்திரை திருவிழாவில் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கள்ளழகர் : சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகும் வீடியோ
Apr 25 2019 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை சித்திரை திருவிழாவின் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், சாமியை ஏற்றி சென்ற பல்லக்கு, ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், சுவாமியை எடுத்து செல்லும் பல்லக்கு, சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் நிலையிலும், ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் குறைந்த அளவே உள்ள நிலையில், சுவாமி ஊர்வலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை பார்த்தாவது, மக்கள் மாற வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.