அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மேலும், பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள், திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
திரு. டிடிவி தினகரனை, அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஏ.என். மூர்த்தி தேவர் நேரில் சந்தித்து, கழகப் பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ராமசுப்பு, துணை பொதுச் செயலாளர் திரு.நைனார் தேவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திரு.டிடிவி தினகரனை, அடையாறு இல்லத்தில், தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் மாநில தலைவர் திரு. முஸ்தபா, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
திரு.டிடிவி தினகரனை, அவரது இல்லத்தில், பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் திருப்பூர்ரைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.குமார், கோவை திரு. ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் ஈரோடு திரு.பரமேஸ்வரன், திருப்பூர் திரு. நந்தகுமார், கோவை திரு. நரேஷ் நாராயணன் ஆகியோர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு. மணிகண்டன் தலைமையில் சந்தித்து, கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதேபோல, திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், கொங்குநாடு மக்கள் கட்சி நிர்வாகி திரு.மணி தலைமையில், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே, திரு.டிடிவி தினகரனை, அடையாறு இல்லத்தில், விழுப்புரம் மண்டல பொருளாளர் மற்றும் மண்டல அமைப்புச் செயலாளர் திரு.சிவராஜ் மற்றும் திரு. அமரமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தினார்.