சகோதரரை துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொன்ற சம்பவம் - திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

Apr 25 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் தம்பியை சுட்டுக்‍ கொலை செய்த வழக்கில், திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி சின்னக்கடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் என்பவர், திமுக இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் சொத்து தகராரில் தனது தம்பி ஜிம்சனை துப்பாக்கியால் சுட்டுக்‍கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பில்லா ஜெகனை தேடிவந்த போலீசார், திருவனந்தபுரத்தில் வைத்து அவரையும், அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும், தூத்துக்குடி ஜுடிசியல் மாதிஸ்திரேட் எண் மூன்றில், நீதிபதி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திருமதி தமிழரசி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்களை அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சொத்துக்‍காக சொந்த தம்பியையே துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொல்லப்பட்ட சம்பவம், தூத்துக்‍குடி மக்‍களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00