கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2 கோடி முறைகேடு புகார் : ஆவின் பொதுமேலாளர் பணியிடை நீக்கம்
Apr 25 2019 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கோடி ரூபாய் முறைகேட்டு புகாரில் ஆவின் பொதுமேலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கிருஷ்ணகிரியில் இயங்கி வருகிறது. இதன் பொதுமேலாளராக இருந்து வரும் பசவராஜ் என்பவர், ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக பால் வினியோகம் செய்த வகையில், ஆவின் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் பண இழப்பு ஏற்பட்டது. இந்த மோசடி தணிக்கையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி ஆவின் நிறுவன பொது மேலாளர் பசவராஜ்-ஐ தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.