அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
Apr 26 2019 12:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கி, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 'பரிசுப்பெட்டகம்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் 19-ம் தேதி சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.