பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Apr 24 2019 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் உத்தரவிடுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, பேராசிரியை நந்தினி உட்பட 7 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் நியமனத்தை ரத்து செய்து, நீதிபதி திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். மேலும், முதல்வர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.