வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே தேர்தல் விதிகளை மீறி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

Apr 24 2019 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே, தேர்தல் விதிகளை மீறி, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால், அவர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்று, அன்று மாலை தனது வாக்கை பதிவு செய்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த்க்கும் வாக்கு மையத்தில் விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விதியை மீறி வாக்களிக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது தவறு என்றும், அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00