அதிமுக-வுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக மதுரை ஆதீனம் கூறுவது ஆதாரமற்றது -டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுப்பு
Mar 25 2019 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக-வுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளதை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். அது உண்மையும் அல்ல என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.