தேனி மாவட்டம் போடியில் ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கேரள ஜீப்களால் பரபரப்பு
Mar 21 2019 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலகத்தை சுற்றி திடீரென நூற்றுக்கணக்கான கேரள ஜீப்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கேரள ஜீப்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவை பிரச்சாரத்திற்காக கொண்டு வரப்பட்டதா, அல்லது பணம் படுவாடா செய்ய நிறுத்தப்பட்டு உள்ளதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளனரா எனவும், இதனை கண்டுகொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கின்றனர் எனவும் சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.