அனைத்து தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெறும் - SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹலான் பாகவி கருத்து
Mar 25 2019 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாற்றத்தை விரும்பும் மக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றம் மற்றும் 19 சட்டமன்ற தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெறும் என SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் திரு. தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள SDPI கட்சியின் தேசிய துணை தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திரு. தெஹலான் பாகவி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் திரு. வி.எம்.எஸ். முஸ்தபாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெறவுள்ள தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.