வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Mar 21 2019 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2 ஆயிரம் ரூபாய் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. மக்களவை தேர்தலை கருத்திகொண்டே இந்த திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, இந்த திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணை நடைபெற்ற போது ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், 2 ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணியை அரசு நிறுத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.