பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திடீர் திருப்பம் : காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயகுமாருக்கு சிபிசிஐடி சம்மன்
Mar 21 2019 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தை உலுக்கு இந்த சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பொள்ளாச்சி திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் மயூரா ஜெயக்குமாரை, திருநாவுக்கரசு நேரில் சந்தித்ததாக வாக்குமூலம் அளித்ததன் பேரில், வரும் 25-ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.