மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் செல்ஃபோனில் படம் பிடித்த நடிகை : சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிய பக்தர்கள்
Mar 21 2019 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நடிகை நிவேதா பெத்துராஜ், பொற்றாமரைக் குளம் மற்றும் கோவில் வளாகத்தில் செல்ஃபோனில் படமெடுத்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துசெல்ல கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் 10 ரூபாய் கட்டணத்தில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ், மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக சென்போது, பொற்றாமரைக்குளம் மற்றும் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்திருந்த புகைப்படங்களையும், கடையில் வலையல் வாங்கும் காட்சிகளையும் படம்பிடித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோவிலுக்குள் செல்ஃபோன் கொண்டு செல்ல நீதிமன்றத்தின் தடை அமலில் இருக்கும் நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜுக்கு மட்டும் எப்படி சலுகை காட்டப்பட்டது என்று பக்தர்களிடையே கேள்வியும், அதிருப்தியும் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை நிவேதா பெத்ராஜ் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.