நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு பெருகும் ஆதரவு : அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி அறிவிப்பு
Mar 22 2019 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
கடலூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநிலத் தலைவர் திரு.ஸ்ரீரங்கன் பிரகாஷ், தமிழகத்தை பிஜேபி மறைமுகமாக ஆளுகிறது என்று குற்றம் சாட்டினார். அதிமுகவில் கோஷ்டி பூசல்களால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும், அதிமுக.வுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.