நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனைக்கூட்டம்
Mar 22 2019 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றன.
நாகை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அமமுக மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளரின் பிரச்சார பயணங்கள், வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.பி.எஸ்அருள், தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன், இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட தலைவர் A.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.எஸ்.செந்தமிழனை ஆதரித்து, மயிலாடுதுறை நகரக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளரை வெற்றிபெறச்செய்வது குறித்தும், மக்கள் விரோத பாஜக - எடப்பாடி அணி குறித்து பிரச்சாரம் செய்வது குறித்தும் தொண்டர்களிடம் விளக்கப்பட்டது.
கழக வேட்பாளர் திரு.எஸ்.செந்தமிழன், மாவட்ட அவைத்தலைவர் திரு.என்.சந்திரமோகன், நகரக்கழக செயலாளர் திரு.ஆனந்தகுமார், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியக்கழக செயலாளர் திரு.கே.வி.ஜனார்த்தனம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மேற்கு ஒன்றியம் நரியாப்பட்டு, பழையனூர் கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட
கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்தனர். திருவண்ணாமலை மத்திய மாவட்டக்கழகச் செயலாளர் திரு.ஏ.ஜி. பஞ்சாட்சரம், சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளை, குருக்கள்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமனோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.T. பச்சைமால், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு.லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு.எம்.ராமசாமி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய தேர்தல் களப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே திருமுருகன்பூண்டி பகுதியில்
நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு.சி.சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பூண்டி பேரூராட்சி கழக செயலாளர் திரு.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.