எடப்பாடி அணியினர் மற்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை, வெற்று தேர்தல் அறிக்கை : மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சனம்
Mar 20 2019 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி அணியினர் மற்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பிரதமருக்கு மனு அளிக்கும் விதமாக இருப்பதாகவும், நிறைவேற்றக்கூடியதாக இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக நீட் போன்ற விவகாரங்களில் எடப்பாடி அணியினர் போலியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, எடப்பாடி அணியினரும், தி.மு.க.வினரும் இன்று அவசர அவசரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். ஒரே கதையில் பல திரைப்படங்கள் உருவாவதைப்போல் இருவரின் தேர்தல் அறிக்கை இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கை பிரதமருக்கு மனு அளிக்கும் விதமாக இருப்பதாகவும், நிறைவேற்றக்கூடியதாக இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் விமர்சித்துள்ளனர்.