உலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை
Mar 11 2019 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடியில் உலக பெண்கள் தின விழாவில், பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.
உலக சாதனைக்காக தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி கலையரங்கத்தில் நர்த்தன கலா சாலா பரதநாட்டிய குழு பரத நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பரத நாட்டியம் நிகழ்த்தினர். இதுவொரு புதிய சாதனையாக அமைந்தது.
இதற்கு முன்னர் திருச்சி கலைக் கல்லூரியில் ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஐந்து நிமிடம் கீர்த்தனை பரதம் ஆடியது உலக சாதனையாக இருந்தது.
இதனை முறியடிக்கும் விதமாக நேற்று பதம் என்னும் பரதம் நிகழ்ச்சியில் 2 ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டு 20 நிமிட பரதநாட்டியம் ஆடியும், யோகாசனம் செய்தும் சாதனை படைத்தனர். விழா முடிந்ததும் பதஞ்சலி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட சான்றிதழ், பரதநாட்டிய நர்த்தன கலா சாலா குழுவினருக்கு வழங்கப்பட்டது.