இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள் விழா : தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்
Feb 19 2019 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகரில் தனியார் கல்லூரி சார்பில் இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் திரு.இளையராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தனியார் கல்லூரியில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இசையின் மூலம் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இளையராஜா மிகவும் சுவாரஸ்யமாக பதில் அளித்தார். இதையடுத்து, மாணவர்களின் விருப்பதற்கு ஏற்ப "ஜனனி, ஜனனி" என்ற பாடலை திரு.இளையராஜா பாடினார்.