அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கழக துணை பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 5 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி, கடலூர் கிழக்கு மாவட்ட கழக மகளிர் அணி மற்றும் அண்ணா தொழிற் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. திரு. டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திரளாக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன. கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.டி. கலைச்செல்வன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் சோழன்.சம்சுதீன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி ஜான்சிராணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி கூட்டம் மாவட்ட செயலாளர் திரு. ஹென்றிதாமஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் காதர் மீரான் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக செயலாளர் திரு டி. கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளன்று, மாவட்டம் முழுவதும் ஏழை எழியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் எனவும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கழக நிர்வாகிள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு, தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற, ஒன்றிய, வட்ட அளவிலான பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி தேர்தல் பணிகளை மேற்கொள்வது என ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கருங்கல் பேரூர் கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மாற்று கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். கழக அமைப்பு செயலாளர் திரு.கே.டி. பச்சைமால், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன், மேற்கு மாவட்ட செயலாளர் திரு. ஜெங்கின்ஸ், ஒன்றிய செயலாளர் மார்டின் ஜோஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.