பெரம்பலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் தீயில் கருகி சேதம்
Feb 19 2019 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சோளப் பயிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த முத்து சோளப் பயிர்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து விசாரணையின்போது, அருகிலுள்ள வயலில் அறுவடை செய்யப்பட்ட சோளத்தட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தும் போது தீ பரவியது தெரியவந்தது.