விதிகளைமீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? - சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

Feb 18 2019 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறந்து செல்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சிக்காக அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்க கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு, விதிகளை மீறிய பேனர்களை அகற்ற நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறபித்த நிலையில், அதை எடப்பாடி அரசு அரசு இதுவரை அமல்படுத்தவில்லை எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்தனர். விதிமீறிய பேனர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அரசு செயல்ப்படுமா என கேள்வி எழுப்பினர். மேலும் பேனர்கள் வழக்குகளில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்வதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00