எடப்பாடி அணியினர் மற்றும் திமுக அமைக்கும் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்படும் சந்தர்ப்பவாத கூட்டணி : அகில இந்திய முஸ்லீம் லீக் குற்றச்சாட்டு
Feb 18 2019 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி அணியினர் மற்றும் திமுக அமைக்கும் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்படும் சந்தர்ப்பவாத கூட்டணி என அகில இந்திய முஸ்லீம் லீக் குற்றம்சாட்டியுள்ளது.
திருச்சியில் செய்தியார்களை சந்தித்த அக்கட்சியின் தேசியத்தலைவர் திரு. சாதிக்பாட்சா, எடப்பாடி தரப்பினரும், திமுகவும் அமைக்கும் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்படும் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், அது எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம் என குற்றம்சாட்டினார்.
இதடையே, அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசிய தலைவர் திரு. ஹெச். ராஜா, திமுகவை மு.க ஸ்டாலின் வழி நடத்தவில்லை என்றும், எடுப்பார் கைப்பிள்ளையாக சிறிய சிறிய சக்திகள் அவரை செயல்படுத்துகின்றன என விமர்சித்தார். தேர்தலில், திமுகவிற்கு இரண்டாவது முறையாக பூஜ்ஜியமே கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.