விறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Feb 14 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாட்டு ஆயத்த பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் மின்னணு வாக்கு இயந்திரங்களை வைக்கக்கூடிய, மதுரை அரசு மருத்துவகல்லூரியில் மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், வாக்கு எண்ணிக்கை மையத்தினை ஆய்வு செய்தது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.