தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.டி. பச்சைமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.ஜெங்கின்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், மாவட்ட நீதிமன்றம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு கழகச் செயலாளர்கள் திரு. ம. ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை நகர கழகத்தின் சார்பில், பொது அலுவலக வளாகத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. கார்த்திகேயன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ உள்ளிட்ட கழகத்தினர், அறந்தாங்கியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, அம்மா பேரவைச் செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, மாவட்ட கழக செயலாளர் திரு. K.K. உமாதேவன் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், ஏரளமான கழக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொள்ளாச்சி நகர கழக சார்பில், எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கோவை வடக்கு மாவட்ட கழக சார்பில், எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.அலாவுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டன. கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் நகர கழகம் சார்பில், மஞ்சகுப்பம் கடலூர் துறைமுகம் ஆகிய பகுதியில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தருமபுரி காமாட்சி அம்மன் தெரு பழைய தருமபுரி ராஜாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைகளுக்கு, கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமானோர் கழகத்தினர் இதில் கலந்துகொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், நீதிமன்றம் அருகில் உள்ள புரட்சித்தலைவரின் திருஉருவச்சிலைக்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காஞ்சி கிழக்கு மாவட்டம் பல்லாவரம் நகர கழக சார்பில், பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி கழகம் சார்பில் மவுலிவாக்கத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவப் சிலைக்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர கழகம் சார்பில் 27 வார்டுகளில் கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அலவாய்ப்பட்டியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், கபிலர்மலை, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட செயலர் பி.பி.சுவாமிநாதன் தலைமையில், கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், புதியம்புத்தூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் திரு. சுந்தர்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கரூர் கடைவீதி தெருவில் காமராஜர் சிலை அருகே எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு, மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். திரு. தங்கவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட கழகம், குற்றாலம் பேரூர் கழகம் சார்பில், அங்குள்ள எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் உள்ள அண்ணா சிலை முன்பு, அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 200-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்டம் கழகம் சார்பில், கழகத்தினர் ஊர்வலமாக சென்று, பேரறிஞர் அண்ணா திருவுருச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சேலம் மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில் அம்மாபேட்டை பகுதிக்குட்பட்ட 32-வது கோட்டத்தில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள காதுகேளாதோர் பள்ளி அருகே எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதுச்சேரியில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து கழகத்தினர் ஊர்வலமாகசென்று, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, வழக்கறிஞர் திரு. வேல்முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.