கஜா புயலை காரணம் காட்டி இடைத்தேர்தலை நிறுத்தியவர்களுக்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டவேண்டும் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
Jan 17 2019 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, திருவாரூரில் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பேசிய திரு. டிடிவி தினகரன், கஜா புயலை காரணம் காட்டி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். எப்போது தேர்தல் வந்தாலும், இடைத்தேர்தலை நிறுத்தியவர்களுக்கு, மக்கள் தக்கப் பாடம் புகட்டவேண்டும் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.