புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், திருவாரூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு வழிநெடுகிலும் கழகத்தினரும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
காலத்தை வென்ற காவியத் தலைவர், எட்டாவது வள்ளல், பாரத ரத்னா என போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் குடந்தை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்.
தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை தெற்கு ஒன்றியம் சார்பில், பட்டாசுகள் வெடித்து கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலுக்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரனுக்கு அங்குள்ள சீனிவாச கோயில் பிரசாதம், ஆலய நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வண்டுவாச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியப் பகுதி கழக நிர்வாகிகள் சார்பில், மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து திரு. டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், திருச்சேறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார். அருள்மிகு கோனேஸ்வரன் கோயில் சார்பில் திரு. டிடிவிதினகரனுக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் குடவாசல் பகுதிக்கு வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, கழக அமைப்புச் செயலாளர் திரு. குடவாசல் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திரு. டிடிவி தினகரனுக்கு யானை மூலம் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இலவங்கார்குடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீருத்ர காளியம்மன் ஆலயம் சார்பில் திரு. டிடிவி தினகரனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆலயத்திற்கு சென்று திரு. டிடிவி தினகரன் வழிபாடு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, திருவாரூர் நகரம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் திரு. டிடிவி தினகரன் பேருரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், கழக தலைமை நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.