ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டு பணத்துடன் படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற 2 பேர் கைது

Jan 16 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வெளிநாட்டு பணத்துடன் படகு மூலம் இலங்கைக்‍கு தப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி- ராமேஸ்வரம் கடல்பகுதியில் வழக்‍கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குந்துகால் கடற்கரையில் இருந்து சுமார் 7 நாட்டிக்‍கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் படகு ஒன்று சென்று கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தனர். பின்னர், அவர்களை விரட்டிச் சென்று வழிமறித்து நடத்திய சோதனையில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் இந்திய பணத்துடன், அமெரிக்‍கா, ஹாங்காங் டாலர்கள் இருந்தது தெரியவந்தது. இந்த வெளிநாட்டு பணத்துடன் தப்ப முயன்ற மதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா, குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00