இலங்கை கடற்படை தாக்‍குதலில் பலியான மீனவரின் குடும்பத்தினருக்‍கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் போராட்டம் - சேதமடைந்த படகுகளுக்‍கும் இழப்பீடு வழங்கவும் கோரிக்‍கை

Jan 16 2019 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்‍குதலில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி கடலுக்‍கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளை, இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் முட்டி மோதி மூழ்கடித்தனர். இந்த சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியைச் சேர்ந்த மீனவர் முனியசாமி உயிரிழந்தார். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தைக்‍ கண்டித்தும், தாக்‍குதலில் பலியான மீனவருக்கு உரிய நிதியுதவி வழங்க வேண்டும் - மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்‍கு முழு நிவாரணம் வழங்கக்‍ கோரியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடியது. மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு மீன்பிடி தொழிலுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00