பொங்கலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - கால்நடை செல்வங்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு
Jan 16 2019 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று, விவசாயிகள், கால்நடைச் செல்வங்களை போற்றும் வகையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
விவசாயத்திற்கு நண்பனாகவும் உறுதுணையாக விளங்கும் கால்நடைகளை போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில், மாடுகளை அலங்கரித்து, கருப்பராயன், கன்னிமார் பொங்கல், பட்டிவடைத்தாய் எனஒன்பது வகையான பொங்கல் வைத்து, விவசாயிகள் வழிபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகமாக கொண்டாடபட்டது. தேரூரில், நடைபெற்ற மாட்டு பொங்கல் வழிபாட்டில் மாடுகளுக்கு மாலை அணிவித்தும் தீபாரனைகாட்டி விவசாயிகள் வழிபட்டனர்.