ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கு : அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Oct 14 2019 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திரு.இன்பதுரை வெற்றிபெற்றதற்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த திரு.அப்பாவு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி மறு வாக்கு எண்ணிக்கை அண்மையில் நடைபெற்றது. இதுதொடர்பாக ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இன்பதுரை தொடர்ந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அத்தொகுதியில் போட்டியிட்ட திரு.அப்பாவு வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.