தமிழகத்தில் லோக் அயுக்தாவுக்கு 2 உறுப்பினர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
Jul 24 2019 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் லோக் அயுக்தா நீதிமன்றத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்புக்கு திரு. ராஜாராம், திரு. ஆறுமுகம் ஆகிய ஓய்வுபெற்ற நீதிபதிகள் 2 பேர் ஏற்கெனவே மாநில அரசால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நியமனத்திற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் லோக் அயுக்தா அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிரான உயர்நீதிமன்றத் தடையை நீக்கி உத்தரவிட்டது. நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.