லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க, சட்ட நடைமுறைகளை பின்பற்றி பழனிசாமி அரசு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Nov 13 2018 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க சட்ட நடைமுறைகளை பின்பற்றி பழனிசாமி அரசு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், உச்சநீதிமன்றம் விதித்த கடும் நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது - இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக்கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்துள்ளதாக கூறியுள்ள திரு.டிடிவி தினகரன், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தை உரிய முறையில் அணுகியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு அம்மா மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மாநில நலன் கருதி, உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் சந்தித்து வருகிறது - லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பழனிசாமி அரசு பெற்றுத்தர வேண்டுமென திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.