காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு - தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் பேட்டி
Mar 23 2018 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணியினர் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அந்த அணியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவது வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை செயல்படுத்தாமல் இருப்பதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க எடப்பாடி அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.