குஜராத்தில் 5,000 பெண்கள் ஒரே இடத்தில் மருதாணி பூசி உலக சாதனை
Feb 6 2018 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில், 5 ஆயிரம் பெண்கள் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மருதாணி பூசி, கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்தியவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் சூரத் நகரில், இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 500 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தப்பட்டதையொட்டி இந்த மருதாணி பூச்சு விழா நடைபெற்றது. 5 ஆயிரம் பெண்கள், இருவேறு வண்ண உடை அணிந்து ஒரே இடத்தில் அமர்ந்து இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்து 500 பெண்கள், ஒரே நேரத்தில் தங்கள் எதிரில் இருந்த தோழியின் கையில், 11 நிமிடங்களுக்குள் பல்வேறு வடிவங்களில் மருதாணியை பூசி கின்னஸ் சாதனை படைத்து அசத்தினர்.