இந்தியாவில் 2,000-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு : கடந்த 24 மணி நேரத்தில் 2,259 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
May 20 2022 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 259 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 822-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 323-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 15 ஆயிரத்து 44 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 614 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரத்து 455 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 191 கோடியே 96 லட்சத்து 32 ஆயிரத்து 518 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.