மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் பேரிடர்தான் கொரோனா பரவல் குறித்து ராகுல் விமர்சனம்
Apr 22 2021 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவிற்கு பேரிடர்தான் என திரு. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல் காந்தி, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் ட்விட்டரில் அவ்வப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் தனக்கு தொடர்ந்து மோசமான செய்திகள் வந்து கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா மட்டும் இந்தியாவுக்கான பேரிடர் இல்லை என்று குறிப்பிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவிற்கு பேரிடர்தான் என விமர்சித்துள்ளார். பொய்யான கொண்டாட்டங்களையும், வெற்று உரைகளையும் விடுத்து நாட்டிற்கு தீர்வை கொடுங்கள் என மத்திய அரசை, திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.