அ.இ.அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் - கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டதில் 3 பேர் காயம்

Apr 23 2014 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரக்கோணம் அருகே அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கியதில், அவருக்கு பின்னால் வந்த இரு வாகனங்கள் சேதமடைந்தன. 3 பேர் காயமடைந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நிறைவு நாளான நேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், அரக்கோணம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. கோ. அரியை ஆதரித்து, அரக்கோணம் பேருந்துநிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். முன்னதாக இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக திரு. வேல்முருகன் சென்றபோது, அரக்கோணம் அருகே வேடல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கற்களை வீசி தாக்கினர். அதில், திரு. வேல்முருகன் வாகனத்துக்கு பின்னால் வந்த இரு வாகனங்களின் கண்ணாடி உடைந்தது. 3 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய நபர்கள் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00