இந்தியா - வெஸ்ட்இண்டிஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரு அணிகளும் பலப்பரீட்சை
Dec 14 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியாவில சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, ஏற்கெனவே நடைபெற்ற டி-20 தொடரில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்த அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இது பகலிரவு ஆட்டமாகும். இதற்காக ஏற்கெனவே, சென்னை வந்த இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணி அனைத்து துறைகளிலும் பலமுடன் இருப்பதால், வெஸ்ட் இண்டிஸ் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சேப்பாக்கம் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இரு அணிகளும் அதிக ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். அதே நேரம் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.