தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கால்பந்தை தரையில் விழாதவாறு தொடர்ந்து சுமார் 15 நிமிடங்கள் கால்களால் உதைத்து சாதனை
Jul 4 2014 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், கால்பந்தை தரையில் விழாதவாறு தொடர்ந்து சுமார் 15 நிமிடங்கள் கால்களால் உதைத்தபடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
பிரசிலில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி, உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கால்பந்து விளையாட்டு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தூத்துக்குடியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான வெங்கடேஷ் என்பவர், கால்பந்தை பயன்படுத்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கால்பந்தை தரையில் விழாதபடி கால்களால் சுமார் 15 நிமிடங்கள் உதைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மாணவர் வெங்கடேஷின் இந்த சாதனையை கண்டுகளித்த பலரும் அவரை வெகுவாகக் பாராட்டினார்கள்.