தென்காசி அருகே டாஸ்மாக் ஒட்டிய தனியார் பாரில் மர்ம நபர்கள் கை வரிசை : பாரை உடைத்து ரூ. 58,000-த்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்
May 31 2023 6:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் மதுபானக் கடை பாரை உடைத்த மர்மநபர்கள், பணப்பெட்டியில் இருந்த 58 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகே தனியாருக்கு சொந்தமான பாரை அதன் உரிமையாளர் திறக்க வந்தபோது, பார் உடைக்கப்பட்டு, பெட்டியில் இருந்த 58 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கேமராவை கொள்ளையர்கள் திசை திருப்பியது தெரியவந்தத. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.