உய்யகொண்டான் கரையில் குப்பைகளை கொளுத்துவதால் பொதுமக்கள் அவதி
Jan 29 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள உய்யகொண்டான் கரையில் குப்பைகளை கொளுத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய்நகர் பாலம் உய்யக்கொண்டான் கரை பகுதி கூத்தைபார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு, தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், சில மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். குப்பைகளில் இருந்து வரும் நச்சு புகையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்து பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.