காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை - தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து, பாராட்டு - 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு

Jul 29 2014 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் திரு. சதீஷ்குமாருக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். தாம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, காமன்வெல்த் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றுள்ள திரு. சதீஷ்குமாருக்கு தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

க்ளாஸ்கோவ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளு தூக்கும் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் திரு. சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு, முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலிலதா நேற்று, அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவ் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்றிருப்பதோடு, புதிய காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம், இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்கும், திரு. சதீஷ்குமார் பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளதற்காக, தமிழக மக்கள் சார்பில், தமது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். திரு. சதீஷ்குமார் பங்கேற்ற முதலாவது சர்வதேச விளையாட்டுப் போட்டியிலேயே, அவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும், விளையாட்டு வீரருக்கான பரிசுத் தொகையை, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாம் அறிவிப்பு வெளியிட்டதை திரு. சதீஷ்குமார் அறிவார் என்றும், இதன்படி, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கு, திரு. சதீஷ்குமார் தகுதி பெற்றுள்ளார் என்றும் முதலமைச்சர் தமது வாழ்த்துக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள திரு. சதீஷ்குமாருக்கும், அவரது வெற்றிக்கு பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் திரு. சதீஷ்குமார் இதேபோன்று மேலும் பல சாதனைகளைப் படைத்து, இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் புகழ் சேர்க்கவேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00