400 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை : இந்தியா சார்பில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர்
Dec 12 2019 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில், சிக்சர் அடித்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில், 400-வது சிக்சரை அடித்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்ரெல் வீசிய மூன்றாவது ஓவரில், ரோகித் சர்மா சிக்சர் அடித்தார். இந்த சிக்சர் மூலம் சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில், அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில், கெயில் முதலிடத்திலும், அப்ரிடி இரண்டாம் இடத்திலும், ரோகித் சர்மா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.