சென்னையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியது
Dec 10 2019 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இப்போட்டியை மாற்றுத்திறனாளி நல்வாழ்வுத் துறை இயக்குனர் ஜானி டான் வர்கீஸ், வருவாய் துறை கூடுதல் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. போட்டியை தொடங்கிவைத்து பேசிய ஜானி டான் வர்கீஸ், தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிக்காக 400 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.