தேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
Dec 5 2019 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற
தேசிய அளவிலான விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த உலக சாதனை நிகழ்வில் அப்பள்ளியில் பயிலும் சுமார் 1800 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், சென்னையில் மாதவரம் மற்றும் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் இதில் கலந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்து அசத்தினர்.