சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டி : 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு
Dec 5 2019 9:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 2 தங்கம் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று, தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க்பட்டது.
சிங்கப்பூர் சிலம்ப கோர்வை கழகமும் மலேசிய சிலம்ப கோர்வை கழகமும் இணைந்து நடத்திய சிலம்பாட்டப்போட்டி, கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று சிங்கபூரில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் சிலம்ப வீரர்கள் சுஜித், சுகித்தா மற்றும் ஸ்ரீமாலன் ஆகியோர் பங்குபெற்றனர். இந்த சிலம்பபோட்டியில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து 160க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் கலந்துகொண்டனர். மகளிர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சுகிதா, சிறந்த போட்டியாளர் என்ற சிறப்பு கோப்பையை வென்றார். இவர்கள் அனைவருக்கும், திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர்கள், சிலம்ப ஆசான்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
byte follow...