பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் வென்ற தமிழக இளைஞர் - ஊர் திரும்பிய வீரருக்கு மேளதாள முழங்க உற்சாக வரவேற்பு
Dec 3 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கன்னியாகுமரி திரும்பிய விளையாட்டு வீரர் கார்த்திகேயனுக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மேளதாள முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூருவில் ஆசிய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில், 48 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பெர்முடா பீச் மாடல் சாம்பியன் ஜூனியர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தங்கப் பதக்கம் வென்றார். இன்று காலை நாகர்கோவில் திரும்பிய கார்த்திகேயனுக்கு ஊர் மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு உதவி செய்தால் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைப்பார்கள் என தெரிவித்தார்.