முதல்முறையாக இந்தியா பங்கேற்கும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று அரங்கேறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு
Nov 22 2019 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா முதல் போட்டியில் வென்றது. இதன்தொடர்ச்சியாக கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 2-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இது இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். மேலும் இவ்விரு அணிகளும், பகல்-இரவு டெஸ்ட்டில் விளையாடுவது இதுவே முதன்முறையாகும். இதனால் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியுள்ளது.