இந்தியா - பங்களாதேஷ் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடக்கம்
Nov 21 2019 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை தொடங்க உள்ளது.
இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை, பகலிரவு போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இந்தியா - பங்களாதேஷ் இடையேயான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், நாளை பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. முதன்முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதை அடுத்து, கொல்கத்தாவின் முக்கிய இடங்கள் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தன.
இது குறித்து பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் தந்துள்ளது என்றார்.